Wednesday, March 31, 2010
சமச்சீர்க்கல்வி – கருத்தியல் சார்ந்த எதிர்பார்ப்புகள்
Monday, March 22, 2010
தமிழ் எழுத்துச் சீர்மை
1989-ல் வா.செ.குழந்தைசாமி குழு பரிந்துரைத்த அறிக்கை, கிடப்பில் போடப்பட்டுவிட்டது..
அது உகர, ஊகார குறியீடுகளில் சீர்மை பற்றி மட்டுமே பரிந்துரைத்தது.
இதன் புதிய 2 குறியீடுகளை மட்டும் ஏற்று, நடைமுறைப்படுத்தி தமிழ் வரிவடிவங்களின் எண்ணிக்கையை வெறும் 39 ஆகக் குறைக்க முடியும்.... யாரும் வலியுறுத்தக் காணோம்!
மேலும், எழுத்துச்சீர்மையின் நன்மைகளாக...
01. குழந்தைகள் எளிதாக எழுத்துகளைக் கற்கலாம்.
02. தமிழுக்குப் புதியவர்கள் விரைவாகக் கற்கலாம்.....................................
என்று மட்டுமே அறிகிறோம். இவற்றோடு கூட,
03. குறியீட்டுச்சீர்மை, விரைவான வாசிப்புக்கு உதவும்.
04. குறியீட்டுகளின் சீர்மை மற்றும் எளிமை, பிற மொழியினரும் தாமே எழுத்துக்கூட்டி தமிழைக் கற்க தூண்டும்.
இம்முயற்சியில், விடுதலை நாளிதழ் அன்றாடம் ஒருபத்தியை, நடப்பு வடிவத்திலும் அதன் கீழே சீர்திருத்த எழுத்துவடிவத்திலும் வெளியிட்டு வருகிறது...
-----அகமத் கனி
சொல் வங்கி
01. அறிவியல்/ஆட்சி/நீதித்துறைகளுக்கான கலைச்சொற்களுக்காக – இணைய வழியில் அணுகத்தக்க வகையில் – சொல்வங்கி அமைத்திட வேண்டும். இதன் மூலம் அகராதிகள்/கலைக்களஞ்சியங்களை வாங்கும் வழிவகைகளையும் (Hyperlink மூலம்) அளிக்கலாம்...
பெரும்பாலும் வாசகர்களின்/ஆர்வலர்களின்/அறிஞர்களின் சொல்லாக்கங்களைத் தரப்படுத்தி பதிவேற்றலாம்.
ஏனெனில், பல ஆண்டுகளுக்கு முன் ராணி வாரயிதழ் வாசகர்களின் பங்கேற்பு/பங்களிப்பு மூலம் அன்றாட வாழ்வில் பயன்படும்
கருவிகள்/உதிரிபாகங்கட்கான எண்ணிறந்த கலைச்சொற்களை வெளியிட்டது... அதே உத்தியை “சொல் வங்கி” உருவாக்கலுக்கும்
பயன்படுத்தலாம்... ”ராணி”யின் பங்களிப்பையும் உள்வாங்கிக் கொள்ளலாம்.
-----அகமத் கனி
Monday, March 15, 2010
கணினி மற்றும் கல்வி
02. கணினி/இணையப் பயன்பாடு பெருகி, காகிதப் பயன்பாடு அருகி வரும் இக்காலகட்டத்தில் இணைய மையங்களில் ஆங்கிலப் பயன்பாடு மட்டுமே இருக்கிறது.. சொந்தமாக கணினி வைத்திருக்காத ஒருவர் – தமிழில் ஆவணங்கள் தயாரிக்கவோ, மின்னஞ்சல் அனுப்பவோ தடுமாற வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த வாய்ப்பில்லமலேயே திரும்பிவிட நேரிடுகிறது.
இதனால், ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தி தங்கள் வேலையை முடித்துக் கொள்கின்றனர்.!
ஏனெனில், அங்கு தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எனவே இணைய மையங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உரிய மென்பொருள் நிறுவப்பட வேண்டும். தமிழ் எழுத்துகள் பொறித்த (Tamil 99) ஆங்கில விசைப்பலகைகள் குறைந்தது பாதி எண்ணிக்கையிலாவது அமைத்திட வேண்டும்.
03. கணினித் தமிழுக்காக கணித்தமிழர்கள் அரும்பாடுபட்டு
ஆராய்ந்து உருவாக்கிய அரசு அங்கீகாரம் பெற்ற விசைப்பலகை
Tamil99தான்! அதன் மூலம் ஆங்கிலவழித் தட்டச்சை விட விரைவாக
உள்ளிட முடியும். ஏனெனில், அதில் தமிழ் எழுத்துகளுக்கு
மாற்று (shift key) விசையை ஒருபோதும் பயன்படுத்த
வேண்டியதில்லை.
எனவே இம்முறையே நிலைபெற்றிட – கணினித்தமிழில் கவனம்
செலுத்திட பள்ளிகளில் எட்டாம் வகுப்பிலேயே தமிழ்99 தட்டச்சுப்
பயிற்சி,
ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சிக்கு முன்னரே அளிக்கப்படவேண்டும்
(முதலிலேயே ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி கொடுத்தால்,
ஆங்கிலவழித் தமிழ் தட்டச்சுக்கு மாறி விடுவர்.!). Tamil 99 தட்டச்சுப்
பயிற்சியில் இயல்பான – சராசரி வேகம் கிட்டிட ஒருவாரப்
பயிற்சியே போதுமானது! – இதை கல்வித்துறையினரே செய்திட
வேண்டும்... தமிழார்வலர்களும் பரப்பிட வேண்டும்!
04. இன்றைக்கு ஒருவருக்கு ஒரு கணினி என்றில்லாவிட்டாலும், ஒருவருக்கு ஒரு கைப்பேசி என்றாகிவிட்டது. கணினிச் செயல்பாடுகளும் கைப்பேசியில் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் கைப்பேசிவழி தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை – சில நிறுவனங்கள் அளித்தபோதும் – நாம் அக்கறை
காட்டாமல் ஆங்கிலத்திலும், ஆங்கிலவழித்தட்டச்சு மூலம் தமிழிலும் பயன்படுத்துகிறோம்.
அஞ்சல்முறை தீவிரமாயிருந்த காலத்தில் நாம் வாழ்த்துஅட்டைகள், பரிசுப்போட்டி படிவங்கள் – இவற்றிலாவது எழுத்துத் தமிழை பயன்படுத்தினோம். கைப்பேசி வந்தபின் இதுகூட அற்றுப்போய்விட்டது...
ஆகவேதான் - தமிழில் குறுஞ்செய்தி மற்றும் அறிவிப்பு விடல் – பெருகிட வேண்டும்.
மேலும், விரைவான உள்ளிடலுக்கு (ஆங்கிலம், இந்திக்கு வழங்கப்பட்டுள்ளதை போல) T9 (Dictionary Facility) வசதியை – கைப்பேசி தயாரிப்பாளரிடம் தமிழுக்கும் கோரிப்பெற வேண்டும். இன்றைக்கு அரியானாவில் அரசினரே வேளாண்மை/வானிலைக் குறிப்புகளை உழவர்களின் கைப்பேசி எண்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவிடுகிறது.... இதனை நம் மாநில அரசு கவனத்திற் கொள்ளவேண்டும்.
05. அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி காரணமாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசு திட்டம் (கல்வி அமைச்சர். நாளிதழ் செய்தி 20.12.08)... எனில், முதல் வகுப்பிலிருந்து தொடங்கும் ஆங்கிலப்பயிற்சி எல்.கே.ஜி.யிலிருந்தா? அந்த கொடுமை நிகழக்கூடாது
-----அகமத் கனி
மரபு சீர்கேடு/சீராக்கல்
02. அரசினர் தி.ஆ.வை நடைமுறைப்படுத்திய பின் ஏன் தொடர்ச்சியற்ற 60ஆண்டு முறையை இன்னும் குறிப்பிட வேண்டும்? 60ஆண்டு முறைக்குப்பதிலாகத்தானே தி.ஆ.!
03. அரசினர்/தனியார் வழங்கிடும் பண்டிகைக்கால போனசை பொங்கலுக்கு என வழங்கி பொங்கல் ஒன்றே தமிழரின் முழுமுதல் திருநாள் (பண்டிகை) என முதன்மைப் படுத்தவேண்டும்.
-----அகமத் கனி