Sunday, February 14, 2010

பூ.அர.குப்புசாமி அவர்களுக்குச் செவ்வணக்கம்


தம் வாழ்நாள் முழுவதும் காவிரி உரிமைக்காகப் போராடியவரும் காவிரி காப்புக் குழுத் தலைவரும் மிகச் சிறந்த தமிழ்த் தேசியச் சிந்தனையாளரும் மூத்த வழக்குரைஞருமான பூ.அர.குப்புசாமி அய்யா அவர்கள் 15.02.10 அன்று இயற்கை எய்தினார். அய்யா பூ.அர.கு அவர்களுக்குத் தகப்பனப்பன்பிள்ளையின் செவ்வணக்கம்.

பூ.அர.குப்புசாமி : வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : 01.08.1933

ஊர் : பூலாம்பாளையம்,

ஆத்தூர் கிராமன்,

கரூர் வட்டனம்

பெற்றோர் : அரங்கசாமி – மீனாட்சி

கல்வி : B.A., B.L., Dip., Anthropology

பொதுத்தொண்டு:

12 வயது முதல் 18 வயதுவரை : மாணவர் தி.க

19 வயதுமுதல் 40 வயதுவரை : பொதுவுடைமைக் கட்சி – கலை இலக்கியப்

பெருமன்றம்

41 வயதுமுதல் 57 வயதுவரை : தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்

- தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்.

அதற்குப் பின் கட்சி அரசியலிலிருந்து முற்றாக விலகல்

1991 க்கு பின் : காவிரிச் சிக்கலில் ஈடுபாடு, தமிழக உரிமைகள், சாதி ஒழிப்பு , தாழ்தப்பட்ட்வர்களின் விடுதலை, தொல்பொருள், சுற்றுச் சூழல், கண்ணகிக் கோட்டம் ஆகியவற்றில் ஈடுபாடு

தொழில் : வழக்குரைஞர்

No comments:

Post a Comment