01. கோவையில் Manchester Towers என்ற அடுக்ககம் ஒன்று உண்டு.. அன்கு வாழ்பவர்கள், சில உயர்வருவாய் தமிழர்களும் பல பிறமாநித்தவர்களும்... கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களித்த குடியிருப்புவாசிகள் 5-6 பேர் மட்டுமே.. ஆனால், வாக்குரிமை உடையவர்கள் சுமார் 250பேர்..
மேலும் மாநகராட்சியிலிருந்து சுற்றுப்புற/சாக்கடை பராமரிப்புக்கும் கட்டுமாணத்திற்கும் பணியாளர்கள் வந்தால், “நாங்களே தரமாகச் செய்துவிடுகிறோம்; வேண்டாம்” எனக் கூறி திருப்பியனுப்பி விடுகின்றனர். இது போன்ற “பொருள்மிகு அயலவர் இறையாண்மை”, சென்னை,கோவை போன்ற நகரங்களில்.. தமிழரின்
உணர்வின்மையினாலும் உட்பகையினாலும் கோலோச்சுகிறது....
ஏறத்தாழ 20ஆண்டுகட்கு முன், சென்னை போன்ற பெருநகரங்களை (மத்திய நேரடி ஆட்சிக்குட்பட்ட) யூனியன் பிரதேசமாக்க அமைச்சர் அருண்சிங், தம் டூன் பள்ளித் தோழர் பிரதமர் ராஜீவுக்கு கூறிய
ஆலோசனைகள்.. மேற்குறித்த சூழல்கள் காரணமாக நடந்தேறிவிடக்கூடாது.
-----அகமத் கனி
No comments:
Post a Comment