1989-ல் வா.செ.குழந்தைசாமி குழு பரிந்துரைத்த அறிக்கை, கிடப்பில் போடப்பட்டுவிட்டது..
அது உகர, ஊகார குறியீடுகளில் சீர்மை பற்றி மட்டுமே பரிந்துரைத்தது.
இதன் புதிய 2 குறியீடுகளை மட்டும் ஏற்று, நடைமுறைப்படுத்தி தமிழ் வரிவடிவங்களின் எண்ணிக்கையை வெறும் 39 ஆகக் குறைக்க முடியும்.... யாரும் வலியுறுத்தக் காணோம்!
மேலும், எழுத்துச்சீர்மையின் நன்மைகளாக...
01. குழந்தைகள் எளிதாக எழுத்துகளைக் கற்கலாம்.
02. தமிழுக்குப் புதியவர்கள் விரைவாகக் கற்கலாம்.....................................
என்று மட்டுமே அறிகிறோம். இவற்றோடு கூட,
03. குறியீட்டுச்சீர்மை, விரைவான வாசிப்புக்கு உதவும்.
04. குறியீட்டுகளின் சீர்மை மற்றும் எளிமை, பிற மொழியினரும் தாமே எழுத்துக்கூட்டி தமிழைக் கற்க தூண்டும்.
இம்முயற்சியில், விடுதலை நாளிதழ் அன்றாடம் ஒருபத்தியை, நடப்பு வடிவத்திலும் அதன் கீழே சீர்திருத்த எழுத்துவடிவத்திலும் வெளியிட்டு வருகிறது...
-----அகமத் கனி
No comments:
Post a Comment